பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டய நிர்ணய சதியில். - ஐ.சி.சி...

பாகிஸ்தான் அணியின் வீரர்கள் ஆட்டய நிர்ணய சதியில் ஈடுபட்டமைக்கான ஆதாரத்தை சர்வதேச கிறிக்கற் சபையானது பாகிஸ்தான் கிறிக்கற் சபையிடம் சமர்ப்பித்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பின் பின் பாகிஸ்தானின் பிரதம தெரிவாளர் இஜாஸ் பட் தற்போதைய அணியிலுள்ள இரு வீரர்களை சுட்டிக் காட்டிய மாதிரி சொல்லியதாகவும், இவை பழைய சம்பவங்களெனவும், ஈடுபட்டது பழைய வீரர்கள் எனவும் தெரிவித்துள்ளாரென கிறிக்கின்போ செய்தி வெளியிட்டுள்ளது.

இஜாஸ் பட்


தொடர்ந்து மேலதிக தகவல்கள் வரும் எனவும் கிறிக்கின்போ தெரிவிக்கிறது....

செய்தியைத் தொடர,
http://www.cricinfo.com/pakistan/content/story/450125.html
என்ற சுட்டிக்கு செல்லுங்கள்...

குறிப்பு: கிறிக்கின்போ தங்களது செய்தியை தற்போது மாற்றியிருக்கிறது.
அதன்படி அது இந்நாள் வீரர்கள் எவரும் இல்லையெனவும், பழைய பிரச்சினையே என்றும் குறிப்பிடுகின்றது.
முழுமையான செய்திகளுக்கு மேல உள்ள சுட்டியை அழுத்துக...

இதே வேளை பாகிஸ்தானின் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண முன்னோடிவட்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தரும், ஐ.பி.எல் 1 இல் கலக்கிய சொகைல் தன்வீரும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யுனிஸ் இற்கு பயிற்சியாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பயிற்சியாளரான  இஜாஸ் அகமட் தொடர்ந்து அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக அணியில் இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments: