Showing posts with label சம்பியன்ஸ் லீக். Show all posts
Showing posts with label சம்பியன்ஸ் லீக். Show all posts

சம்பியன்ஸ் லீக்கிலும் பாகிஸ்தான் இல்லை

பாகிஸ்தான் சம்பியன்ஸ் லீக்கில் இம்முறை பங்குபற்றாது என்று பாகிஸ்தான் கிறிக்கட் சபைத்தலைவர் இஜாஸ் பட் தெரிவித்தார். தான் இது பற்றி ஏற்கனவே லலித் மோடியுடன் பேசியதாகவும், பாகிஸ்தானிலிருந்து ஒரு அணியும் கலந்து கொள்வதற்கான சாத்தியம் இல்லை என்றும் இஜாஸ் பட் தெரிவித்தார்.

எங்கள் வீரர்கள் IPLக்குத் தெரிவு செய்யப்படவில்லை எனவே எங்கள் நாட்டு வீரர்களோ, அணிகளோ சம்பியன் லீக்கில் பங்குபற்றப்போவதில்லை என்று தெரிவித்தார்.

சம்பியன்ஸ் லீக்கில் நாடுமுழுவதும் இருந்து சிறந்த முதல்தர அணிகள் தெரிவுசெய்யப்படும். முதலாவது சம்பியன்ஸ் லீக் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்றது. ஆனால் பங்குபற்றும் நாடுகளில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்தது, ஆனால் மும்பாய் தீவிரவாத தாக்குதலால் அவர்கள் பாகிஸ்தானை தவிர்த்திருந்தனர். 2010ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் லீக் நடைபெறும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த அவமானமான வெளியேற்றதுக்குப்பிறகு லலித் மோடி பாகிஸ்தான் எதிர்கால போட்டிகளில் விளையாடும் என்தெரிவித்தாலும், இஜாஸ் பட் அது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை, எதிர்காலத்தில் IPL மற்றும் சம்பியன்ஸ் லீக்கில் விளையாடுவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கப்படவில்லை ஆனால் இந்த வருடம் தாங்கள் இவை ஒன்றிலும் கலந்து கொள்ளப்போவதில்லை என்று பட் தெரிவித்தார்.