அவுஸ்திரேலியாவுடனான வெள்ளையடிப்புத் தோல்விக்குப்பிறகு பாகிஸ்தான் கிறிக்கற்றில் பல குளறுபடிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பல பாகிஸ்தான் கிறிக்கற் வீரர்களுக்கு அபராதம் தடை என்பன விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சகலதுறை விரர் சொகைப் மலிக், மற்றும் ரானா நாவிட் ஆகியோர் ஒரு வருட போட்டித்தடை மற்றும் 2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர அப்ரிடி, கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகியோருக்கும் அவர்களின் நடத்தையை சீர்செய்துகொள்ள இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அப்ரிடி கம்ரான் அக்மல் ஆகியோருக்கு 3 மில்லியன் அபராதமும்? உமர் அக்மலுக்கு 2மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ருவன்ரி ருவன்ரி உலகக்கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியும் தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன் சொகைப் மலிக், ரானா நாவீட் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை, தவிர மொகமட் ஹபீஸ், சல்மான் பட், கலிட் லத்தீப், உமர் அக்மல், பாவாட் அலாம், மிஸ்பா உல் ஹக், அப்துல் ரசாக்ஈ அப்ரிடி, யசீர் அரபாத், ஹமட் அசாம், உமர் குல், மொகமட் அமீர், மொகமட் அசிவ், சகீட் அஜ்மல், கம்ரான் அக்மல் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சாசெப், மொகமட் சமி, ரானா ஹசன், நாவ்ட்யசின், சப்ராஸ் அஹமட் ஆகியோர் மேலதிக ஐந்து வீரர்களாக அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆதாரம்-http://www.onlinenews.com.pk/details.php?id=159721
Showing posts with label அக்மல். Show all posts
Showing posts with label அக்மல். Show all posts
அந்தக் கறுப்பாடு அக்மலா? மறுக்கிறார் அக்மல்...
பாகிஸ்தானின் முதற்தெரிவில்லாமல் போயிருக்கும் விக்கற் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான கம்ரன் அக்மல் தான் கிறிக்கற்றை எப்போதும் மாசற்று விளையாடியதாகவும், எப்போதும் அணிக்காகவே விளையாடியதாகவும் எனினும் தன் மீதான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்கள் குறித்து அதிர்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
'இந்த விடயத்தை நான் நிச்சயமாக தொடர்ந்து கொண்டு செல்லப்போகிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த அவுஸ்ரேலிய சுற்றுலாவின் போது ரெஸ்ற் போட்டியொன்றில் 3 பிடிகளையும், ஒரு முக்கியமான ரண் அவுட் சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட பின் கம்ரன் அக்மலின் செயற்பாடுகள் கடுமையான கண்காணிப்புக்குள் வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
சில ஊடகங்கள் பாகிஸ்தானின் அந்தச் சுற்றுலாவிற்கான முகாமையாளராக செயற்பட்ட அப்துல் ரஹிப் கூட விசாரணைக் குழுவிடம் கம்ரனின் செயற்பாடுகள் குறித்து அச்சம் தெரிவித்திருந்ததாகத் தெரிவித்தன.
இதுவரை பாகிஸ்தானுக்காக 3 வகைக் கிறிக்கற் போட்டிகளிலும் மொத்தமாக 191 முறை களமிறங்கியிருக்கும் கம்ரன் அக்மலையும் இன்னொரு வீரரான ரானா நவீட் உல் ஹசனையும் சுட்டிக்காட்டி இவர்கள் தான் ஆட்டநிர்ணச் சதியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.
எனினும் இந்தக் குற்றசாட்டுக்கள் தொடர்பாக கம்ரன் அக்மல் காட்டமாக மறுத்துள்ளார்.
'நான் ஒருபோதும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. குறிப்பிட்ட சிலர் எனது கிறிக்கற் வாழ்க்கையை அழிக்க முற்படுகிறார்கள் போலத் தெரிகிறது.' என்று தெரிவித்தார் அக்மல்.
அக்மலின் நெருங்கிய நண்பரும், அவரது முகவருமான அஸார் மஜீத் உம் இது பற்றி தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார்.
'நான் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.ஆனால் பாகிஸ்தானிலுள்ள சில தனி நபர்கள் கம்ரன் அக்மலின் பெயரை நாசப்படுத்த முயல்கிறார்கள். பாகிஸ்தானுக்காக கம்ரன் விளையாடுவதை அவர்கள் விரும்பவில்லை.' என்றும் தெரிவித்தார்.
'இந்த விடயத்தை நான் நிச்சயமாக தொடர்ந்து கொண்டு செல்லப்போகிறேன்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த அவுஸ்ரேலிய சுற்றுலாவின் போது ரெஸ்ற் போட்டியொன்றில் 3 பிடிகளையும், ஒரு முக்கியமான ரண் அவுட் சந்தர்ப்பத்தையும் தவறவிட்ட பின் கம்ரன் அக்மலின் செயற்பாடுகள் கடுமையான கண்காணிப்புக்குள் வந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் 32 ஓட்டங்களால் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
சில ஊடகங்கள் பாகிஸ்தானின் அந்தச் சுற்றுலாவிற்கான முகாமையாளராக செயற்பட்ட அப்துல் ரஹிப் கூட விசாரணைக் குழுவிடம் கம்ரனின் செயற்பாடுகள் குறித்து அச்சம் தெரிவித்திருந்ததாகத் தெரிவித்தன.
இதுவரை பாகிஸ்தானுக்காக 3 வகைக் கிறிக்கற் போட்டிகளிலும் மொத்தமாக 191 முறை களமிறங்கியிருக்கும் கம்ரன் அக்மலையும் இன்னொரு வீரரான ரானா நவீட் உல் ஹசனையும் சுட்டிக்காட்டி இவர்கள் தான் ஆட்டநிர்ணச் சதியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகின.
எனினும் இந்தக் குற்றசாட்டுக்கள் தொடர்பாக கம்ரன் அக்மல் காட்டமாக மறுத்துள்ளார்.
'நான் ஒருபோதும் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடவில்லை. என் மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. குறிப்பிட்ட சிலர் எனது கிறிக்கற் வாழ்க்கையை அழிக்க முற்படுகிறார்கள் போலத் தெரிகிறது.' என்று தெரிவித்தார் அக்மல்.
அக்மலின் நெருங்கிய நண்பரும், அவரது முகவருமான அஸார் மஜீத் உம் இது பற்றி தனது ஆட்சேபனையைத் தெரிவித்தார்.
'நான் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.ஆனால் பாகிஸ்தானிலுள்ள சில தனி நபர்கள் கம்ரன் அக்மலின் பெயரை நாசப்படுத்த முயல்கிறார்கள். பாகிஸ்தானுக்காக கம்ரன் விளையாடுவதை அவர்கள் விரும்பவில்லை.' என்றும் தெரிவித்தார்.




