Showing posts with label றிக்கி பொன்ரிங். Show all posts
Showing posts with label றிக்கி பொன்ரிங். Show all posts

தொடரை வென்றது அவுஸ்ரேலியா...

அவுஸ்ரேலிய மேற்கிந்தியத் தீவுகளிடையே நடைபெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை 4-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.
ஒருபோட்டி மோசமான காலநிலை காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





5ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலியா ஷேன் வொற்சனின் அதிரடி 51, ஹடினின் 31, பொன்ரிங்கின் அதிரடி 61, கிளார்க் இன் 47, வைற் இன் 22 மற்றும் இறுதி நேரத்தில் அதிரடியாட்டம் புரிந்த அடம் வொஜெஸ் இன் 45 மற்றும் ஜேம்ஸ் ஹோப் இன் 26 பந்துகளில் பெறப்பட்ட 57 ஓட்டங்களால் 324 ஓட்டங்களைக் குவித்தது.







மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ராம்போல் 2 விக்கற்றுக்களையும், பொலார்ட் 2 விக்கற்றுக்களையும், சமி ஒரு விக்கற்றையும் கைப்பற்றினார்.



தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி வழமையைப் போல விக்கற்றுக்களை ஆரம்பித்திலேயே இழக்க ஆரம்பித்து 199 ஓட்டங்களுடன் சுருண்டது.
வழமையைப் போல கிறிஸ் கெயில் டக் பொலிங்கரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் கெயில் துடுப்பெடுத்தாடிய 4 முறையும் டக் பொலிங்கரின் பந்துவீச்சிலேயே கெயில் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இதுவரை டக் பொலிங்கர் விளையாடி கெயில் துடுப்பெடுத்தாடிய 6 போட்டிகளில் 6 முறையும் டக் பொலிங்கரின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக அதிகபட்சமாக டரன் சமி 41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் கெரன் பொலார்ட் 51 பந்துகளில் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
 அவுஸ்ரெலியா சார்பாக பொலிங்கர் 3 விக்கற்றுக்களையும், போல் ஹரிஸ் மற்றும் புதியவர் ஸ்மித் ஆகியோர் 2 விக்கற்றுக்களையும், மக்கே மற்றும் ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கற்றையும் கைப்பற்றினர்.



போட்டியின் ஆட்டக்காரராக ஜேம்ஸ் ஹோப்ஸ் உம், தொடரின் சிறப்பாட்டக்காரராக தொடர்முழுவதும் பிரகாசித்த அவுஸ்ரேலிய அணித்தலைவர் றிக்கி பொன்ரிங் உம் தெரிவாகினர்.

இந்தத் தொடருக்கு முன்னர் தாங்கள் அவுஸ்ரேலியாவை 4-1 என்ற ரீதியில் தோற்கடிப்போம் என கிறிஸ் கெயில் சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் தொடரின் நடுவே அவுஸ்ரேலியா தங்களை விட சிறப்பாக விளையாடுகின்றனர் என்று ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.



இரு அணிகளுக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதற்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை ஹோபார்ட் இல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லீ ஓய்வு பெறலாம்...

தனது ரெஸ்ற் மற்றும் ஒருநாள் அணித்தலைவர் றிக்கி பொன்ரிங் உடன் தொடர்புகொண்டு கலந்துரையாடிவிட்டு தனது 12 வருட சர்வதேசக் கிறிக்கற் வாழ்வைத் தொடர்ந்து தொடர்வதா அல்லது ஓய்வுபெறுவதைத் தீர்மானிக்கப் போவதாக பிரட் லீ தெரிவித்துள்ளார்.


அவரது ரெஸ்ற் எதிர்காலம் ஏற்கனவே அவுஸ்ரேலிய அணியின் பயிற்சியாளர் ரிம் நெல்சனின் கருத்தால் இல்லாமற் போயுள்ள நிலையில் பிரட் லீ மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தனது கவனத்தைத் திருப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்தபோதிலும் கடந்த த சண்டே ரெலிகிராப் இற்குக் கருத்துத் தெரிவித்த லீ தனது முழங்கைச் சத்திரசிகிச்சையால் தான் இனி ஒருபோதும் பந்துவீசாமல் போவதற்குரிய எல்லா வாய்ப்புகளும் உள்ளன எனத் தெரிவித்தார்.

'எனது கிறிக்கற்றில் எதுவும் நடக்க வாய்ப்புக்கள் உள்ளன. நான் சொல்வதன் அர்த்தத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சிலவேளைகளில் நான் மட்டுப்படுத்தப்பட்ட பந்துப்பரிமாற்றப் போட்டிகளில் விளையாடலாம்.

310 ரெஸ்ற் விக்கற்றுக்களையும், 324 ஒருநாள்ப் போட்டி விக்கற்றுக்களையும் கைப்பற்றியிருக்கும் லீ 'நான் சிலவேளைகளில் இனி ஒரு பந்தும் வீசாமல் போகலாம். அப்படி ஒரு நிலை என்றாலும் இதுவரை நான் செய்தவற்றை நினைத்து திருப்தியடைகிறேன்.' என்றார்...

13 வருட கிறிக்கற் வாழ்வில் லீ மொத்தமாக 12 காயங்களை சந்தித்திருக்கிறார்.  எனினும் 'என் வாழ்வில் நான் சந்தித்த பெரிய சத்திரசிகிச்சை இதுதான், இது மிகக் கொடிய வலியுடையது' என்று தெரிவித்தார் லீ.