இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இந்திய அணி அறிவிப்பு...

இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவித்த இந்திய அணியில் புதிய வீரராக கர்நாடகாவைச் சேர்ந்த வினய் குமார் மட்டுமே இடம்பெறுகிறார். இதேவேளை சுழற்பந்துவீச்சாளரான பியூஸ் சவ்லா உம் கிட்டத்தட்ட 2 வருடங்களின் பின்னர் அணிக்கு திரும்புகிறார்.
எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் வேகப்பந்துவீச்சாளர் இசாந் சர்மா மற்றும் துடுப்பாட்ட வீரர் விராத் கோலி, மனிஷ் பான்டி ஆகியோர் முக்கியமாக அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை....



காயங்கள் காரணமாக அவஸ்தைப்படும் கம்பீர் மற்றும் ஆஷிஷ் நெக்ரா ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் இடத்தை ப்ரஹ்ஜான் ஒசா மற்றும் அமித் மிஸ்ராவைப் பின்தள்ளி பியூஸ் சவ்லா கைப்பற்றுகிறார்.

அணி:
மகேந்திரசிங் டோணி, விரேந்தர் செவாக், கெளதம் கம்பீர், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், டினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஷகீர் கான், பிரவீன் குமார், ஆஷிஷ் நெக்ரா, ஹர்பஜன் சிங், பியூஸ் சவ்லா, வினய் குமார், றோகித் சர்மா

0 comments: