சுழலுக்கு சாதகமாக மைதானத்தை தயார்படுத்தக்கோரிய BCCI


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதான பராமரிப்பாளர் பிரபிர் முகஞ்ஜி தனக்கு BCCIயிடமிருந்து பெப்பிரவரி 14ஆம் திகதி ஆரம்பிக்கும் போட்டிக்கான மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது போல தயார் செய்யும்படி தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தெரிவித்தார். எது எவ்வாறிருந்த போதும் இந்திய கிறிக்கற் முகாமைத்துவ அதிகாரி இரட்னகார் செட்டி இந்தமாதிரியான எந்த ஒரு வேண்டுகோளுக்கும் செவிசாய்க்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.

இந்திய அணி தனது முதலாவது போட்டியை இன்னிங்சாலும் ஆறு ஓட்டங்களாலும் இழந்த பின்னர் மீண்டும் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தைப் பெறுவதற்கு அடுத்த போட்டியில் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முதலாவது போட்டியிலும் மைதானம் சுழலுக்கு சாதகமாகவே இருந்தது ஆனால் இந்திய பந்து வீச்சாளர்களின் திறமையற்ற பந்து வீச்சுத்தான் அவர்களால் விக்கட்களைச் சாய்க்கமுடியாமைக்குக்காரணமாகும்.

எனக்கு BCCI அதிகாரி ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது சுழலுக்கு ஏற்றாற்போல் மைதானத்தை தயார் செய்யும்படி, ஆனால் நான் உத்தியோகபூர்வமான தகவல்(ஈ-மெயில் போன்ற) வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக அவருக்குத் தெரிவித்துவிட்டேன். என்று முகர்ஜீ தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர் "நான் வழக்கமான இந்தியா மைதானங்கள் போல மைதானத்தை தயார்படுத்தச் சொல்லியிருக்கிறேன், நான் தேவையின்றி அபாயத்தில் காலடியெடுத்து வைக்கத்தயாரில்லை. கடந்த வருடம் இலங்கை -இந்தியப் போட்டி இரத்துச் செய்யப்பட்டது போல நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக என்றார்.

முதல்நாளிலேயே உங்களுக்கு பந்து சுழலுக்கு சாதகமாக இருக்கவேண்டுமென்றால் ஏன் உங்களுக்கு டெஸ்ட்டுக்கு எதற்கு மைதானத்தை தயார்படுத்த வேண்டும், தயார்படுத்துபவர் எதற்கு? ஈடன் கார்டன் மைதானம் போதியளவு விக்கட்டுகளைச்சாய்க்கக்கூடிய மற்றும் சுழலையும் BOUNCEஐயும் பெறக்கூடிய மைதானம் அதை பந்து வீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும் என்றார்.

2008ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கான்பூரில் கடைசி டெஸ்ட்போட்டிக்கு 1-0 என்று முன்னிலையுடன் சென்ற தென்னாபிரிக்கஅணி, முதலாவது நாள் முதலே  மைதானத்தில் காணப்பட்ட சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான தன்மை காரணமாக 3 நாட்களில் தென்னாபிரிக்கா தோற்கடிக்கப்பட்டதும், அதன்பின்னர் ICC, BCCIயிடம் விளக்கம் கோரியமையும் குறிப்பிடத்தக்கது.

செய்தி - http://www.cricinfo.com/

2 comments:

கன்கொன் || Kangon said...

பழைய குருடி கதவத் திறவடி கதைதான்....

Bavan said...

ஆமாம் என்ன கொடுமை இது இதெல்லாம் ஒரு பிழைப்பா? வாழ்க BCCI..:p