மியாண்டடிடம் பாக்.பயிற்றுனராக கோரிக்கை

பாகிஸ்தான் கிறிக்கற் சபை ஜாவிட் மியண்டாட்டை மீண்டும் பாகிஸ்தானின் கிறிக்கற் பயிற்றுவிப்பாளராக ஆகுமாறு கேட்டுள்ளது. திங்கட்கிழமை செனட் ஸ்டான்டிங் கொமிட்டியின் ஒன்றுகூடலில் தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் கிறிக்கற்றின் தற்கோதைய நிலை மற்றும் பாகிஸ்தான் கிறிக்கற் சபை தலைவர் இஜாஸ் பட் மற்றும் மியண்டாட் இடையிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இஜாஸ் பட் தன்னை முக்கியமான விடயங்களில் ஈடுபடுத்துவதை விரும்பவில்லை என்று முன்னர் மியண்டாட் தெரிவித்திருந்தார்.  கிறிக்கற் கொமிட்டியிடம் தனக்கு மியாண்டட்டின் தகமைகள் மீது நம்பிக்கை இருக்கிறது, முன்பு கூட அவருக்கு அப்பதவியை வழங்கத்தயாராக இருந்தோம் என இஜாஸ் தெரிவித்தார்.

இஜாஸ் அவர்கள் மியண்டாட் மிகுந்த கிறிக்கற் அறிவு மற்றும் பயிற்றுவிக்கும் தொழிநுட்பங்களை அறிந்தவர் அவரை பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக்க நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியபோதும், மியண்டாட் தனது வேலைகள் காரணமாக தன்னால் முழுநேரப்பயிற்சியாளராக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அவுஸ்திரேலிய வெள்ளையடிப்பு, அணிக்குள் இருக்கும் பிரச்சினைகள் எனப'பல பிரச்சினைகளில் சிக்கியிருப்பதும் அங்கு பாதுகாப்புப்பிரச்சினைகள் காரணமாக அங்கு நடைபெற வேண்டிய போட்டிகள் டுபாயில் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பயிற்றுவிப்பாளர் பிரச்சினையும் சுர்ந்து கொண்டுள்ளது.

குறிப்பு: சிலநாட்களாக சில வேலைப்பழுக்களால் தமிழில் கிறிக்கற்றில் செய்தி வெளியிடுதல் குறைந்திருந்தது... இனி வழமையைப் போல தொடர்ந்து செயற்படுவோம்.

0 comments: