டுபாய் பயணத்திற்கு முன் புதிய பயிற்சியாளர் வாய்ப்பில்லை...

பந்துவீச்சுப் பயிற்சியாளரை அவசர அவசரமாக இந்த மாத டுபாய் மற்றும் பங்களாதேஷ் சுற்றுலாவுக்கு முன்னதாகவே நியமிப்பதில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிறிக்கற் சபை பின்வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதைவிடுத்து அடுத்த ஆஷஷ் தொடருக்காக சிறப்பான பந்துவீச்சுப் பயிற்சியாளரைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற இந்த நியமனத்தை பிற்போட முற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதவியை இராஜினாமா செய்த கிப்ஸன்

டுபாய்க்கு இன்னும் 10 நாட்களில் இங்கிலாந்து பயணமாக உள்ளது, அங்கே 2 இருபதுக்கு இருபது சர்வதேச போட்டிகளை பாகிஸ்தான் அணிக்கெதிராகவும், அதைத் தொடர்ந்து 3 மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள்போட்டிகளையும் 2 ரெஸ்ற் போட்டிகளையும் பங்களாதேஷ் அணிக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது.

இது தொடர்பாக இங்கிலாந்தின் பயிற்சியாளர் அன்டி பிளவரும், முகாமைத்துவ இயக்குனர் ஹக் மொரிஸ் உம் கலந்துரையாடியதாகவும் தற்காலிக அடிப்படையில் டுபாய், பங்களாதேஷ் சுற்றுலாவிற்கு பந்துவீச்சுப் பயிற்சியாளரை நியமிப்பதைப் பற்றியே கலந்துரையாடியதாகவும், எனினும் சோதிக்கும் வகையில் ஒருவரை மேற்படி தொடர்களுக்கு நியமிக்கும் வாய்ப்புக்கள் பெரிதாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

0 comments: