சச்சின் சாதனை - தொடரை வென்றது இந்தியா

இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான தொடர் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு தொடர், டெஸ்டிலும் முதலிடத்துக்கா போட்டி இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்தவகையில் இன்றைய போட்டி இன்னும் முக்கியத்துவம்வாய்ந்த ஒரு உலகசாதனை நிகழ்த்தப்பட்ட போட்டி.

அதுவும் உலகின் துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் 200 ஓட்டங்கள் பெற்று அதிக ஓட்டம் பெற்ற முதல் வீரராகவும் கிறிக்கற் வரலாற்றில் 200 ஓட்டங்களைப்ப பெற்ற முதல் வீரராகவும் திகழ்கிறார். இதுவரை ஒருநாள் போட்டியில் ஒரு வீரர் பெற்ற அதிக ஓட்டமாக இருந்த சிம்பாபே வீரர் சி.கே.கொவென்ரி மற்றும் பாகிஸ்தானின் சயீட் அன்வர் ஆகியோரின் 194  ஓட்டங்கள், இன்று சச்சினால் தகர்க்கப்பட்டது.

இதில் மற்றுமொரு சாதனையாக ஒரு ஒருநாள்இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் பெற்ற வீரராக சச்சின் விளங்குகிறார்.

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அந்தவகையில் ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடிகளாகக் களமிறங்கிய சேவாக் சச்சின் ஆரம்பம் முதலே ஓட்டக்குவிப்பில் வேகம்காட்டினர். ஆனால் 3.5 ஆவது ஓவரில் 9 ஓட்டங்களுடன் சேவாக் ஆட்டமிழக்க, அடுத்துக்களமிறங்கிய தினேஸ் கார்த்திக் சச்சினுடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். 29 ஓவர்கள் நிலைத்து நின்ற இந்த ஜோடி 194 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டது. 79 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் கார்த்திக் ஆட்டமிழக்க அடுத்து வந்த யுசுப் பதான் 36 ஓட்டங்களைப் பெற்று 41வது ஓவரில் ஆட்டமிழந்தார். அந்தவேளையில் இந்தியா 300 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் டோனி தனது விஷ்வரூபத்தை அனைவருக்கும் காட்டியிருந்தார், 37 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.(7நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓடடங்கள் அடங்கலாக).

இறுதிவரை ஆட்டமிழக்காத சச்சினின் 200 (25நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓடடங்கள் அடங்கலாக)ஓட்டங்களுடன் இந்தியா 401 ஓட்டங்களை பெற்றது.

சச்சினி பிட்ச் மப்


 பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, அம்லா கிப்ஸ் ஜோடியுடன் தனது இன்னிங்சை ஆரம்பித்தது. 3வது ஓவரிலேயே பிரவீன் குமார் கிப்சை ஓய்வறைக்கு அனுப்பினார். அடுத்து துடுப்பெடுத்தாட வந்த வன் டி மெர்வ் அடித்தாட முற்பட்டு சீகிகரமே ஓய்வறை திரும்பினார். ஆனால் போட்டியை வெற்றிக்கு இட்டுச்செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹசிம் அம்லா ஆரம்பத்தில் சற்று நம்பிக்கையளித்தாலும் சிறீசாந்தின் பந்து வீச்சில்34 ஓட்டங்களைப் பெற்றவேளையில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு இணைந்த டிவில்லியர்ஸ், கலிஸ் ஜோடியும் நின்று பிடிக்கவில்லை, கலிசும் ஆட்டமிழக்க தனிமனிதனாக போராட்டத்தில் ஈடுட்ட டிவில்லியர்ஸ் கடைசிவரை ஆட்டமிழக்காது 101 பந்துகளுக்கு 114 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவின் அதிகபட்ச இணைப்பாட்டமாக டி வில்லியர்ஸ், பானேல் ஜோடி பகிர்ந்து கொண்ட 77 ஓட்டங்கள் பதிவாகியது.

ஜே.பி டும்மினி,ஸ்ரெயின் ஆகியோர் ஓட்டமெதையும் பெறாமலும்,பீட்டர்சன்-9, பவுச்சர்-14, பார்னல்-18, லங்கர்வெல்ட்-12 ஆகிய சொற்ப ஓட்டங்ளையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் தென்னாபிரிக்கா 42.5 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 248 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக உலகசாதனைத் துடுப்பாட்டவிரர் சச்சின் தெரிவானார். அத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற ரீதியில் வெற்றியீட்டியது.

இப்போட்டி முடிவில் சச்சினுக்கு சில்வர் துடுப்பு, மற்றும் அந்த மைதானத்தில் பார்வையாளர் அரங்குக்கு சச்சினின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. தனது சாதனை பற்றி சச்சின் கூறுகையில் இந்தச்சாதனையை தான் தனது இந்திய மக்களுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

சச்சின் 200 ஓட்டங்களைப் பெறும் போது அவுஸ்ரேலியாவின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் சச்சினுக்கு வாழ்த்துக்களைத் ருவிற்றர் மூலமாக தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழில் கிறிக்கற் வலைத்தளம் சார்பில் சச்சின் டெண்டுல்கருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

2 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

well. நன்றி. முடிந்தால் இவைகளையும் பாருங்களேன்!

சச்சின் 200 : சாதனைக் காணொளிகள்

சச்சின் டெண்டுல்கர் - ஒரு சகாப்தம் - அரிய படங்களாக

தங்க முகுந்தன் said...

வித்தியாசமா இருக்கே! வாழ்த்துக்கள்!