அமைதியாக நாடு திரும்பிய பாகிஸ்தான்



பாகிஸ்தான் அணி நேற்று மாலை அவுஸ்திரேலியாவில் பெற்ற வெள்ளையடிப்புக்குப்பின்னர் எந்தவித அறிவித்தலுமின்றி நாடு திரும்பியது.ஹஜ் ரேர்மினல்லுக்குப் பதிலாக ஜின்னா ரேர்மினலைப்பயன்படுத்தி வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களை பாதுகாப்பு வீரர்கள் ஊடகங்களிடமிருந்து தவிர்க்க முற்பட்டாலும் இன்டிக்ஹாப்  அலாம் (பாகிஸ்தான் கிறிக்கெட்பயிற்றுவிப்பாளர்) ஊடகங்களிடம் மாட்டிக்கொண்டார். ஊடகங்களின் பல்வேறு ஏடாகூடமான கேள்விகளுக்குப்பதிலளித்த அவர். "வீரர்களின் தவரான துடுப்புப்பிரயோகமும், சீரற்ற களத்தடுப்புமே தோல்விக்குக் காரணம் என்றார்.மேலும் கருத்துத்தெரிவித்த அவர் பாகிஸ்தான் அணி இதற்கு முன்னும் அவுஸ்திரேலிய மண்ணில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்பதையும் வீரர்கள் மனதில் கொள்ளவேண்டும் என்றார்


அதுதவிர மொஹமட் யூசுப், யூனிஸ்கான், அப்ரிடி ஆகியோர் இந்த வார ஆரம்பத்தில் வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான் அணி 3டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு T20 போட்டி என அனைத்துப்போட்டிகளிலும் தோல்வியடைந்தமை, மற்றும் அப்ரிடி பந்தைக்கடித்த விடயம் என பல விடயங்கள் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. இது அவர்களுக்கு ஒரு மறக்கமுடியாத தொடராக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


செய்தி- http://www.dawn.com/

0 comments: