இன்டிக்காப் அலாம் ,யூசுப் -விசாரணை


பாகிஸ்தான் கிறிக்கற் சபைக்கு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார் அதன் கிறிக்கற் பயிற்றுவிப்பாளர் இன்டிக்காப் அலாம். பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலிய அணியால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது இருபது போட்டிகள் அனைத்திலும் வெள்ளையடிப்பு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இது ஒரு இரகசியமான அறிக்கை என்னால் இதில் கூறப்பட்ட விடயங்களை வெளிப்படுத்த முடியாது. நான் கூடுதலாக போட்டியின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியிருக்கிறேன் நான் குறிப்பிட்ட விடயங்கள் பாகிஸ்தான் கிறிக்கற் சபைக்கு அவுஸ்திரேலிய வெள்ளையடிப்புத் தோல்விக்கான காரணங்களை அறிய உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

இன்டிக்காப் அலாம் மற்றும் மொஹமட் யூசுப் ஆகியோர் அவுஸ்திரேலிய  தொடரில் பெற்ற தோல்விக்குப்பின்னர் ஆறு பேர் கொண்ட குழுவால் விசரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர். முதற்கட்ட விசாரணை நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் யூசுப் அணிக்குள் ஒரு கறுப்பாடு இருக்கிறது, அணி ஒற்றுமையை அணிவீரர் ஒருவரே குலைக்கிறார் என்று குறிப்பிட்ட விடயம் அனைவரும் அறிந்தது, எனவே இந்த விசாரணைக்குப்பிறகு அந்த கறுப்பாடு யார் என்ற உண்மைகள் வெளிவந்தாலும் வரலாம்.

செய்தி - http://www.dailytimes.com.pk/

0 comments: