இங்கிலாந்துக்கெதிரான T20க்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு


இங்கிலாந்துக்கெதிராக பெப்பிரவரி 19ஆம் 20ஆம் திகதிகளில் டுபாயில்  நடைபெறவிருக்கும் இருபது இருபது கிறிக்கற் போட்டிக்கான 14 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி பாகிஸ்தான் கிறிக்கற் நபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. சொகைப் மலிக் அணித்தலைவராக அறிவிக்கப்பட்டதோடு, பந்துக்கடித்த சர்சையில் சிக்கிய அப்ரிடி இரண்டு இருபது இருபது போட்டிகளில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டதால் முதலாவது போட்டியில் மட்டும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கம்ரான் அக்மல் அண்மையில் விளையாடிய போட்டிகளில் சோபிக்கத்தவறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டு, புதிய விக்கட்காப்பாளராக சப்ராஸ் அகமட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர்அசிவ் 2008ஆம் ஆண்டு தனது பையில் போதைப்பொருள் வைத்திருந்ததையடுத்து ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் அவரை தங்கள் நாட்டுக்குள் நுழைய தடைவிதித்துள்ளதால் அவரும் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

பாகிஸ்தான் கிறிக்கற் சபையின் பிராதான நிறைவேற்று அதிகாரி வசீம் பாரி ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில் "அப்ரிடி இரண்டு போட்டிகள் தடை பெற்றிருக்காவிட்டால் இருபது இருபது போட்டிகளுக்கு அவரே தலைமை தாங்கியிருப்பார் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி விபரம் - சொகைப் மலிக் (அணித்தலைவர்), இம்ரான் நசீர், இம்ரான் பர்கத், கலிட் லத்திப், உமர் அக்மல், பாவாட் அலாம், சகிட் அப்ரிடி, அப்துல் ரசாக், சப்ராஸ் அகமட், உமர் குல், சயீட் அஜ்மல், யசீர் அரபாத், வகாப் ரியா,மொஹமட் தல்கா

செய்தி - http://www.topnews.in/

0 comments: