IPL இற்கு ஆப்பு வருகிறதா?

IPLலில் நியூசிலாந்தின் பங்களிப்புப்பற்றி சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க, மற்றும் இங்கிலாந்து அணிகளின் கிறிக்கற் வீரர்கள் சங்கம் IPLஇல் பங்குபற்றுவதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.






வீரர்கள் தங்கள் சொந்த முடிவைஎடுக்கலாம் என்றும், ஆனால் கிறிக்கற் வீரர்கள் சங்கம் IPLஐ தவிர்க்கும்படி அவர்களது ஆலோசனையை தெளிவாக முன்வைக்கவிருப்பதாகவும் பாதுகாப்பு ஆலோசகர் டிக்கர்சன் அவர்கள் தீவிரவாதத் தாக்குதல் பற்றிய செய்தி உண்மை எனத்தெரிவித்துள்ளதும் இவர்களை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

நியூசிலாந்து கிறிக்கற் வீரர்கள் சங்கத்தின் முகாமையாளர் ஹீட் மில்ஸ் தனது வீரர்கள் பங்குபற்றுவது இன்னும் முடிவெடுக்கப்படவில்லையென்றும், ஆனால் IPLலுடன் சம்பந்தப்பட்ட 6 வீரர்களுடன் கதைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

US$750,000 (சேன் பொண்ட் )டொலரிலிருந்து US$400,000 டொலர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் தங்கள் இந்தியா செல்ல நிராகரித்தால் வருமானத்தை இழக்கவேண்டி ஏற்படும்.


ஸ்டீபன் பிளமிங் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளர் பணியில் இருக்கிறார், ஸ்டைரிஸ் டெக்கன் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் போதும் 23 பேர் கொண்ட அணியில் தெரிவு செய்யப்படவில்லை. ஜெசி ரைடர், கைல் மில்ஸ் ஆகியோர் இம்முறை அணியில் இடம்பெறவில்லை.


நியூசிலாந்து கிறிக்கற் சபை, IPL தலைவர் லலித் மோடியிடமிருந்தும் BCCIயிடமிருந்தும் வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புமாறு அழுத்தங்களை பெறுவதாகவும், ஆனால் IPL ஒரு சர்வதேச அணிகளுக்கிடையிலா போட்டியல்ல, இதில் வீரர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு, தங்கள் முடிவை அவர்கள் எடுக்கலாம் என்று நியூசிலாந்து கிறிக்கறின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிக்கர்சன் தெரிவித்தார்.


மேலும் கருத்துவெளியிட்ட அவர் இது பெரும் அதிருப்தியை அளிப்பதாகவும், இம்முறை IPl இந்தியாவில் நடைபெறாவிட்டால் அது உலக கிறிக்கற்றுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.


நியூசிலாந்து ஹொக்கி அணிக்கு உலகக்கிண்ண ஹொக்கி போட்டிக்குச் செல்ல அனுமதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹொக்கி போட்டிக்கான அணிகள் ஒரே விடுதியில் தங்கியிருப்பதும், ஒரே இடத்தில் மட்டுமே போட்டிகள் நடைபெறுகிறது. ஆனால் IPL போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள 12 இடங்களில்நடைபெறப்போவது குறிப்பிடத்தக்கது.


கடைசி IPL போட்டி கூட கடைசிநேர அறிவித்தலின்படி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டது, கவனத்தில்கொள்ளப்படவேண்டிய விடயமாகும்.

0 comments: