என்னைப் பற்றி பொலிங்கர் அறிந்துள்ளார்-கெய்ல்

மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கிறிஸ் கெய்ல் தான் டக் பொலிங்கரின் பந்துவீச்சை எதிர்கொள்வதில் தடுமாறுவதை ஒத்துக் கொள்கிறார்..



மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் நடந்து முடிந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கிறிஸ் கெய்லை டக் பொலிங்கரே ஆட்டமிழக்கச் செய்தார், அதுவும் வேளைக்கே ஆட்டமிழக்கச் செய்தார்.

நியூ சவுத் வேல்ஸ் இன் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான டக் பொலிங்கர் இன்றைய இரண்டாவது போட்டியில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கற்றுக்களை வீழ்த்து அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டதோடு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

'என்னைப் பற்றிய அளவுகோலை நிச்சயமாக அவர் பெற்றுவிட்டார். (கெயிலின் துடுப்பாட்ட முறை, அதில் உள்ள குறைபாடுகளை). அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.'

'சிட்னிப் போட்டியில் (3 ஆவது போட்டியில்) இந்தப் போட்டியைத் தொடர எதிர்பார்க்கிறேன். இப்படியான விடயங்கள் விளையாட்டிற்கு நல்லது. இம்முறை நம்பிக்கையுடன் நல்ல ஆரம்ப விக்கற் இணைப்பாட்டத்தைப் பெற்று எங்கள் மத்தியவரிசையை வேளைக்கே விளையாடாமல் செய்ய முயற்சிப்போம்' என்றார் கெய்ல்.

'எல்லாப் பந்துவீச்சாளர்களும் தொடர்ந்து நன்றாகப் பந்துவீசுவதைப் பார்க்கும் போது நீங்கள் அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்கள் மாற்றங்களைச் செய்கிறார்கள், ஆனால் புதிதாக வருபவர்களும் சிறப்பாக விளையாடுகிறார்கள்.'

அத்தோடு போட்டியைக் காண வரும் இரசிகர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கு தங்கள் அணியின் பலவீனம்/ஒழுங்காகக் போட்டியிடாத தன்மையும் காரணம் என்பதையும் கிறிஸ் கெயில் ஒத்துக் கொண்டார்.

இன்றைய போட்டியைக் காண வெறும் 8,378 பார்வையாளர்களே வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் ஆரம்பிக்க முன்னர் தாங்கள் இந்தத் தொடரை 4-1 என்ற விகிதத்தில் வெல்வோம் என கிறிஸ் கெய்ல் எதிர்வுகூறியிருச்தமையும் முதற்போட்டியில் தோல்வியடைந்த பின்னர் கிறிக்கற் சார்பானவர்கள் 'கிறிஸ் கெய்ல் 4-1 என்பதில் குறிப்பிட்ட ஒரு தோல்வி இதுதான்' என் நக்கல் பாணியில் கதைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments: