ஷேண் வோண் விளையாட மாட்டாரா?

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்தமுறை IPLலில் விளையாடுவது குறித்து தான் ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திக்கவுள்ளதாக ஷேண் வோண் அறிவித்துள்ளார். இதுதவிர ஹொங்கொங்கின் ஏசியா டைம்ஸ்சில் வெளியான "இந்திய விளையாட்டுப்போட்டி தாக்கப்படும் என்ற தீவிரவாத இயக்கமொன்றின் செய்தி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தச்செய்தி உண்மை என அறியப்பட்டால் IPL போட்டி ஏற்பாட்டாளர்கள் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்கருதி உரிய நடவடிக்கைகள் எடுப்பார்கள் எனக்கூறப்படுகிறது.

ஷேண் வோண் இன் பாதுகாப்பு நிபுணர் திரு. டிக்கர்சனின் ஆலோசனைப்படியே போட்டியில் கலந்து கொள்வது தொடர்பாக முடிவெடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.இந்தியாவில் உலகக்கிண்ண ஹொக்கி போட்டி, அடுத்து IPL போட்டிகள், அதைத்தொடர்ந்து கொமன்வெல்த் போட்டிகள் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நாங்கள் ஹோட்டல்களில் தங்கியிருக்கிறோம், மைதானத்துக்கு பேருந்துகளில் பயணிக்கிறோம், இவை தவிர கடந்த முறை லாகூரில் இலங்கைக்கு நடந்தது உங்களுக்கு நினைவிருக்கும், ஆகவே இது பயங்கரமான ஒரு விடயம் என்று ஷேண் வோண் மேலும் தெரிவித்தார்

இது தவிர ஏற்கனவே பாதுகாப்புப் பிரச்சினை குறித்து இங்கிலாந்து கொமல் வெல்த் அணி அச்சம் வெளியிட்டதும், நாளிதள் ஒன்றில் அவுஸ்திரேலிய பெரிய தலைகள் சொந்தப்பாதுகாப்புக்காக அதிகாரிகளை இந்தப்போட்டிக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments: