கிரேம் ஸ்மித்திற்கு விரலில் காயம்...

தென்னாபிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் இற்கு விரலில் காயமேற்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் களத்தடுப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவருக்கு காயமேற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மைதானத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட X-கதிர்ப் பரிசோதனையில் அவரின் காயம் பெரிதளவில் இல்லை எனவும், தசைநாண்களில் பிரச்சினை ஏதும் இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ள போதிலும், அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உள்ளூர் வைத்தியாசாலை ஒன்றிற்கு MRI scan இற்காக ஸ்மித் செல்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கிரேம் ஸ்மித்


களத்தடுப்புப் பயிற்சிகளில் கிரேம் ஸ்மித் இற்கு இடது கையின் சிறிய விரலில் (சின்னி விரல்) காயமேற்பட்டது. தென்னாபிரிக்க அணியின் ஊடக முகாமையாளர் மைக்கல் ஒவன் ஸ்மித் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் விரலின் வெளிப்பகுதி பாதியில் காயமேற்பட்டுள்ளதாகவும், மேற்கொள்ளப்பட்ட X-கதிர்ப் பரிசோதனையில் என்பு முறிவு ஏதும் காணப்படவில்லை என்றும் அதை உறுதிப்படுத்த MRI scan மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

'அவர் அடுத்த போட்டியில் நிச்சயமாக விளையாடுவார்' என்று தெரிவித்த தென்னாபிரிக்காவின் ஏபி.டீ.வில்லியர்ஸ் 'அவர் நிரப்பமுடிாயத வீரர்' என்றும் தெரிவித்தார்.

கடந்த 20 மாதகாலப்பகுதியில் ஸ்மித் பல்வேறு காயங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
2008 ஏப்ரலில் ஐ.பி.எல் இல் ரெனிஸ் எல்போ வும், பின்னர் மிற்சல் ஜோன்சன் ஸ்மித் இன் கையில் என்பு முறிவை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ற் போட்டிகள் எதிர்வரும் 14ம் திகதியன்று கொல்கத்தாவில் ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.