இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

கடந்த 14ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பமான இந்தியா தென்னாபிரிக்காவுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான முதலிடத்தை தெரிவு செய்யும் டெஸ்ட் போட்டி 5வது நாளான இன்று முடிவுக்குக்கு வந்தது. கடைசிவரை தோல்வியைத்தவிர்க்கப் போராடிய தென்னாபிரிக்காவால் கடைசியில் அது முடியாமல் போனது. முதல் போட்டியில் இன்னிங்சால் இந்தியாவை வென்ற தென்னாபிரிக்காவைப் பழி தீர்க்கும் வகையில் இந்தியா இன்னிங்சாலும் 57 ஓட்டங்களாலும் வெற்றியீட்டியது.

முதலில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, கிரேம் சிமித்தின் விக்கெட்டை முதலிலேயே பறிகொடுத்தாலும் அம்லா, பீட்டர்சன் ஆகியோரின் சதங்களின் துணையுடன் 218 ஓட்டங்களை எட்டி வலுவான நிலையை அடைந்த வேளையில் பீட்டர்சனின் விக்கெட் இழப்பும் அடுத்து 229 ஓட்டங்களைப் பெற்றபோது அம்லாவின் ஆட்டமிழப்பும் தென்னாபிரிக்காவின் சரிவுக்கு வழிவகுத்தது. அடுத்த வந்த ஜக் கலிஸ்(10), ஏ.பி.டி.வில்லியர்ஸ்(12) , பார்னல்(12), மோர்க்கல்(11) ஆகியோரைத்தவிர அனைவரும் ஒற்றை ஓட்டங்களுடனேயே ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 296 ஓட்டங்களுக்குள் சுருண்டது.இங்கு சகீர்கான் 4 விக்கெட்களையும், ஹர்பஜன் 3 விக்கெட்களையும் இசாந் சர்மா, மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்தியஅணி சோவாக்(165), சச்சின்(106), V.V.S.லக்ஸ்மன்(143), டோனி(132) ஆகியோரின் அபார சதங்களுடன் 643 ஓட்டங்களுக்கு 6விக்கெட்களை இழந்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. மோர்க்கல் 2விக்கெட்டையும், ஸ்டெயின், ஹரிஸ், ஜே.பி.டும்னி ஆகியோர் தலா 1 விக்கெட்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய தென்னாபிரிக்கஅணியின் ஆரம்ப ஜோடிகள் சீக்கிரமாகவே ஓய்வறைக்குத் திரும்பிவிட ஹசிம் அம்லா தனி மனிதனாக ஆடுகளத்தில் நின்று போராடினார், துடுப்பாட்ட வீரர்கள் யாருமே இவருக்குத் துணைபுரியாமல் போக கடைசிவரை போராடிய இவரைப்பாராட்டாமல் இருக்கமுடியாது. கடைசிவரை ஆட்டமிழக்காத அம்லா இரண்டாவது இன்னிங்சிலும் சதமடித்தார்(123). இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாகப் பந்து வீசிய ஹர்பஜன் சிங் 5 விக்கெட்டுகளையும், மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும், இசாந் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த ஹசிம் அம்லா தெரிவு செய்யப்பட்டார். முதலாவது போட்டியிலும் அம்லா சிறப்பாட்டக்காரர் விருது பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதுதவிர அம்லா சச்சினின் பந்துவீச்சில் அம்லா அடித்த பந்து பவுண்டரி எல்லைக்கருகில் நின்றுவிட அதை பவுண்டரி எல்லைக்குள் தட்டிவிட்டார் சேவாக் இதை அவதானித்த நடுவர்கள் இந்தியாவுக்கு தண்டனையாக 5 ஓட்டங்களைதென்னாபிரிக்காவுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

0 comments: